முதலில் மதியஉணவு திட்டத்தை துவக்கியவர் -சர் பி. தியாகராய செட்டியார்-TESTFKRISHNAGIRI


1897 ம் காலங்களில் தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்த காலம்.
   அப்போது சென்னையில் தொடக்கப் பள்ளி வசதிகூட 
அரிதாகக் காணப்பட்டது. அங்கிருந்த சீனிவாசராகவாச்சாரியார்  பள்ளியை முடிவிட்டனர் அதனால் மாணவர்கள்தெருவில் இதைக்கண்ட பிட்டி தியாகராய செட்டி என்பவர் தமது  சொந்த செலவில்வண்ணாரப்பேட்டை பகுதியில் 
இருக்கும்  சிறுவர்கள் பயின்றிட
 வடசென்னை செகண்டரிப் பள்ளி ”யினை 3.12.1897 அன்று  தொடங்கினார்.    அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் 
கட்டணமின்றிக் கல்வி கற்றனர்.  இந்தப் பள்ளி 1904இல் 
உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.அதன் பின் 
தியாகராயர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றுப் புகழ்பெற்றது.
மதிய உணவு திட்டத்தின் முன்னோடி :
 தியாகராயர் சென்னை நகராண்மை தலைவராக இருந்தபோது 
 கல்வி        பெற இயலாமல் இருந்த ஏழைக்குழந்தைகள் ,
 கல்வி வசதி பெற சென்னையின் அனைத்து பகுதிகளிலும் தொடக்கப்   பள்ளிகளை  தோற்றுவித்தார்அடிக்கடி  பள்ளிகளுக்கு செல்லும் 
 தியாகராயர் பள்ளி ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையும் அவர்களின் எண்ணத்துக்கு ஏற்றார் போல் நடந்தும் கொள்வார் .  
ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் ஏழ்மையை அவருக்கு எடுத்து 
கூறியதும்  மாணவர்களின் இயலா சூழலை கண்காணிக்க ஏற்பாடு 
செய்தார் .

அதிலிருந்து அவர் அறிந்து கொண்டது ஏழைகள் உணவு பெறுவதில்  சிக்கல் இருப்பதால் அவர்களின் குழந்தைகளும் உணவுக்காக பள்ளிக்கு தொடர்ந்து வராமல்   உணவிற்காக சுற்றுவதை கண்டார் .
          இதனடிப்படையில் உதித்ததே குழந்தைகளுக்கு மதிய உணவு 
வழங்குதல் திட்டம் ஆகும் . ஏழைச் சிறார்கள் தொடர்ந்து கல்வியினைப் பெற       நகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு தருவதற்கும் ஏற்பாடு 
செய்தார்இதனால் பாதியில் பள்ளியை விட்டு நிற்கும் மாணவர் 
எண்ணிக்கை குறைந்ததுமாணவரிடையே கல்வி பயிலும் ஆர்வம் 
தூண்டப்பட்டது.

இதுவே நமது காமராசரை கவர்ந்த  "மிக முக்கிய  திட்டமானது" .1920ம் வருடம் நீதிக்கட்சித்தலைவர் பிட்டி தியாகராஜ செட்டியாரின் 
முயற்சியாலே பள்ளிக்கு பசியோடு வந்து செல்லும் சிறார்களுக்கு மதிய 
உணவு வழங்கும் திட்டத்தினைக் கொண்டு வந்தனர்.   
அதற்கு பெயர் Midday Meals Scheme  என்பதாகும்அப்போது சென்னை 
மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது இந்தத் திட்டத்தைக் 
கொண்டு வர ஏதுவாக   இருந்தது.    பிரிட்டிஷ் அரசு இந்த மதிய உணவுத்திட்டத்திற்காக பெரும் செலவுஏற்படுகிறது என்றுச்சொல்லி நிறுத்தி 
விட்டதுமீண்டும் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களின் முயற்சியினாலே 
சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு 
வழங்கப்பட்டு வந்ததுஇதன் பயன்களை சிறையில் காமராசரோடு 
இருந்த மாஸ்டர் முலம் அறிந்து கொண்டார் அதன் பின் காமராசரை 
அடிக்கடி சந்தித்த நம் ஆசிரியர்களும் மதிய உணவின் அவசியத்தை 
அவரிடம் கூறினர்   இதன் தொடர்ச்சியைத்தான் 1956ம் வருடம் காமராஜர் கொண்டு வந்த 
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். 
சரி யார் இந்த பிட்டி தியாகராயர செட்டியார் ?

 
சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் 
(ஏப்ரல் 27, 1852 - ஜூன் 23, 1925) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். . 1925 இல் இவர் இறந்த போது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்.பி. தியாகராயரின் அவர்களின் தன்னலமற்ற விடாமுயற்சிகள் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த அரும் பணிகளுக்கு இடையே 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் வெலிங்டன் பிரபு அவர்கள்,நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க தான் விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார்.


அன்புடன்  அருண் பிரகாஷ் ராஜ் & மதிவாணன்  உடன் தமிழ் செல்வன் 
                      செயலர் கிருஷ்ணகிரி வட்டாரம் 
இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும்.
என் முத்தோர்  சொல்வழி.............. எழுத்தாக்கம்

1.காமராசரை முதல்வராக்கியதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முக்கிய பங்கு 

2.மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ?

https://krishnagirikoottanihistory.blogspot.com/2020/03/testfkrishnagiri.html

3.கல்விபுரட்சிக்கு வித்திட்ட வேலூர் சிறை - 


Comments

Popular posts from this blog

மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ? TESTFKRISHNAGIRI